Thursday 5 February 2015

திருடர்களின் தேசம்

ஏன் ஏமாற்றுகிறவர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்?

ஏமாறுபவர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பதால்...

ஏன் ஏமாறுபவர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள்? 

எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாததால்..

ஏன் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று தெரியாமல் போகிறது? 

ஏமாந்தவர்கள் சங்கடத்தாலும் அவமானத்தாலும் அதை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் போவதால்..

அதனால் முதலில் நான் எப்படி எல்லாம் ஏமாந்தேன் என்று பகிரப்போகிறேன். 


என் அனுபவங்களை எழுத எழுத என்னைப்பெரிய ஏமாளி என்று நினைத்து முகவரி தேடி வர மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.


நான் ஏதோ பெரிதாக ஏமாந்திருப்பேன் என்று நினைத்து நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். ஆனால் நான் சின்னச் சின்னதாய் நிறைய ஏமாந்திருக்கிறேன்.

ஏமாறக்கூடாது என்று ஆசைப்படுபவர்கள் முதலில் இனிமேல் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று சத்தியம் செய்து விட்டு படிக்கத் துவங்குங்கள்..

சரி அதற்காக திருடர்களின் தேசம் என்று தலைப்பு வைப்பதா? ஏதோ தேசம் முழுக்க திருடர்கள் என்கிற அளவுக்கு அர்த்தம் ஆகிவிடாதா?

தேச வித்தியாசம் இல்லாமல் எல்லா இடத்திலும் திருடர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால் எல்லா தேசங்களும் திருடர்கள் தேசம் ஆகிவிடும். அந்த எச்சரிக்கைக்காத்தான் இந்தத் தலைப்பு.

வாங்க ஏமாறலாம்.. ஸாரி.. ஏமாறாமல் தப்பிக்கலாம்.

No comments :

Post a Comment