Saturday 9 May 2015

நாளைய தீர்ப்பு

சாதாரண மனிதர்களுக்கான நீதி, சல்மான்கான்களுக்கான நீதி என நீதி இரண்டு வகைப்படும்.


நமக்கு நீதியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடையாது. ஆனால் எந்த வகை நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்று மட்டும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அரசன் அன்று கொல்வான்  ஆண்டவன் நின்று கொல்வான் என தவறுகளை யாரோ தண்டிக்கட்டும் என்று நினைக்க ஆரம்பித்ததிலிருந்து தவறுகள் பெருகத்தொடங்கியிருக்க வேண்டும்.

தவறு செய்பவர்கள், நம் அளவில் சில தவறுகளை செய்ய அனுமதிக்க (டூ வீலர் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டுவது மாட்டினால் லஞ்சம் கொடுப்பது ) அல்லது பழக்கிவிட்டதால் ( ஓட்டுக்கு பணம் )  தவறுகளை தட்டிக்கேட்கும் தார்மீக பலத்தையும் இழந்து வருகிறோம்.

நாளைய தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு கூட நமக்கு மனோதைரியம் கிடையாது.

நாளைய தீர்ப்பு நம்முடைய மடமைக்கும் சேர்த்தே வழங்கப்படும் என்றே நினைக்கிறேன்.

No comments :

Post a Comment