Friday 20 March 2015

போனது மாநிலத்தின் மானம் அல்ல; கல்வியின் மானம்


பிஹார் தேர்வு முறைகேடுகள் யாருக்கும் எந்த வித அதிர்ச்சியையும் அளித்திருக்காது என்றே நினைக்கிறேன்.

'எவ்வளவோ பார்த்துட்டோம் . இதைப் பார்க்க மாட்டோமா?' என்ற மனநிலையில்தான் மக்கள் இதைப் பார்த்திருப்பார்கள்.

எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் வந்து விட்டபிறகு, ஆசிரியர்களே லஞ்சம் கொடுத்துத்தான் அரசுப்பணிக்கு வர முடியும் என்ற நிலை இருக்கும்போது, ஒட்டுப்போட கொடுத்த பணம் பத்தாது என்று மக்கள் சண்டை போட ஆரம்பித்த பிறகு இதில் ஆச்சரியப்பட அல்லது அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது..?

தேர்வு முறைகேடுகள் எல்லா நிலைகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடக வளர்ச்சியால் அவற்றை இப்போது நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவ்வளவுதான்.

பிஹார் முதல்வர் வருந்துவதுபோல, 'இது மாநிலத்திற்கு அவப்பெயர் அல்ல'. உண்மையில் கல்வி முறைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர்.

அடுத்த பரபரப்பு செய்தி கிடைக்கும் வரையாவது இதைப்பற்றி கொஞ்சம் யோசிப்போம்.

No comments :

Post a Comment